×

வெங்கமேடு அருகே அனுமதியின்றி மது விற்ற 2 பேர் கைது

கரூர், மே 21: கரூர் வெங்கமேடு அருகே அனுமதியின்றி மதுபானத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக  2 பேரை மீது போலீசார்  கைது செய்தனர். கரூர் சேலம் பைபாஸ் சாலை வெங்கமேடு அருகே அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக கரூர் தாசில்தார் வெங்கமேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கரூர் மாவட்டம் வீரியம்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன்(29), பெரியகுளத்துப்பாளையத்தை சேர்ந்த பாலசுப்ரமணியன் ஆகிய இருவரும் மதுபானத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக தெரிகிறது. இதனடிப்படையில், அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த 3,895 மில்லி லிட்டர் அளவு கொண்ட 10 பாட்டில்கள் மற்றும் ரூ. 7ஆயிரத்து 500 ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் 2 பேர் மீதும் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Vengammedu ,
× RELATED வெங்கமேடு மேம்பாலத்தின் கீழ்...